திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம் - சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி மிரட்டுவதாக குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில், தாய் படுகாயம் அடைந்துள்ளதால் தந்தை வரும் வரை காத்திருக்கும் சூழலில் சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் காவல்துறையினரின் வாகனம் போது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினர் சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள மிரட்டி வருவதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.



திருப்பூர் காங்கேயம் சாலையில் நேற்று போலீஸ் வாகனத்தை இயக்கி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சிறுமி திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக வீரசின்னன் மீது 304 A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வீரசின்னன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.



இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதில் திவ்யதர்ஷினி மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திவ்யதர்சனியின் பள்ளி பை கீழே விழுந்த போது நிலை தடுமாறிய ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த காவல்துறையினரின் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் சிறுமி திவ்யதர்சனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்து உடலை பெற்றுக்கொள்ள காவல்துறையினர் தங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் குழந்தையின் தாய் ராஜேஸ்வரி படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையிலும் தந்தை குவைத்தில் இருக்கக்கூடிய நிலையில் தாங்கள் எப்படி உடலை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறுகின்றனர்.

அதனால் தந்தை வரும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவிப்பதால் காவல்துறையினர் தங்களை உடலை பெற்றுக்கொள்ள தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இதுவரை காவலர் வீர சின்னன் மது போதையில் இருந்ததாக தெரிவித்த குற்றச்சாட்டு காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தந்தை வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி வர தூதரகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் இன்று இரவு அவர் குவைத்தில் இருந்து இந்தியா புறப்படுவார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...