அத்திக்கடவு அவிநாசி திட்டம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் - தலைமை பொறியாளர் தகவல்

அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது, சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் திட்டம் அடுத்த மாதம் முழுமையான பயன் பாட்டுக்கு வரும் என நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.


கோவை: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அடுத்த மாதம் முழு பயன்பாட்டுக்கு வரும் என நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் கூறியுள்ளார்.

அன்னூரை அடுத்த குன்னத்தூராம்பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலை மற்றும் சோதனை ஓட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கினர்.

மேலும், இந்த திட்டம் சில மாதங்களில் முடியும் நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அந்த நீரை முறையாக பாசனத்துக்கு பயன்படுத்தத் திட்டமிடுவது குறித்தும், கிராமங்களில் இந்த திட்டத்தின் கீழ் குளங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் மின்சாதனப் பொருள்களின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

இதனையடுத்து, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது, அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிப்ரவரி முதல் தொடர்ந்து குட்டைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்ப சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் முழுமையான பயன் பாட்டுக்கு வரும்,

இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கிவைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அன்னூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...