10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

கள் இறக்க அனுமதி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 18 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் செஞ்சேரிமலை அருகே உள்ள பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.



இந்த காத்திருக்க போராட்டத்தை தமிழ்நாடு உழவர் தினமான இன்று விவசாயிகளுக்காக உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தி விவசாய சங்க தலைவர் ஈசன் முருகசாமி தொடங்கி வைத்தார்.



இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசன் முருகசாமி பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டமானது 18 மாவட்டங்களில் தமிழக பாதுகாப்பு விவசாய சங்கம் சார்பில் நடைபெறுகிறது.

கொப்பரை தேங்காய் விலை நிர்ணயம், பாமாயிலுக்கு பதிலாக நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் கள் இறக்குவதற்கும் அனுமதி ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து அரசு செயல்படுத்த வேண்டும்.

உரிய இழப்பீடு வழங்க வேண்டும் பால் முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களைப் போல விவசாய பொருள்களை தமிழகத்திலும் விற்பனை செய்ய வேண்டும்.

அரசு எங்களை அழைத்துப் பேசி வார்த்தை நடத்தினால் இது போன்ற போராட்டங்களில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண பயன்படுத்திக் கொள்வோம். இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...