திருப்பூரில் ரயில் முன் செல்பி எடுத்த போது தவறி விழுந்து இளைஞர்கள் பலி!

ஈரோட்டை சேர்ந்த பாண்டியன் மற்றும் விஜய் ஆகிய இளைஞர்கள் இருவரும், திருப்பூர் அடுத்த அனைப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்று ரயில் முன் நின்று செல்பி எடுத்த போது, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் அருகே ரயில் முன் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மற்றும் விஜய் ஆகியோர், திருப்பூர் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து கொண்டு அப்பகுதியில் உள்ள நீட்டிங் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்தனர்.

இதனிடையே நேற்றைய தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், பாண்டியனும் விஜய்யும் அவருடன் தங்கி உள்ள சக நண்பர்களிடம், ரயில் நிலையம் சென்று ரயில் முன் நின்று செல்பி எடுத்து அனுப்புவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் கூறியதன் படி, திருப்பூர் அடுத்த அனைப்பாளையம், சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்ற விஜய்யும்., பாண்டியனும், அவ்வழியே வந்த ரயில் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.



அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருவரும் ரயில் முன் விழுந்த நிலையில், ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் பாண்டியன் மற்றும் விஜயின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்ஃபி மோகத்தால் திருப்பூரில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...