நில ஆர்ஜித நடவடிக்கையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு - விவசாயிகள் சங்க பொது செயலாளர் தகவல்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.



கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்க கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. 



இந்நிலையில் இன்று காலை விவசாயிகள் சங்க (சாதி, மதம் கட்சி சார்பற்றது) ஒருங்கிணைப்பாளர் மணி, மாநில பொது செயலாளர் கந்தசாமி தலைமையில் சிவானந்தா காலனியில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கோரிக்கை பெட்டியில் மனு அளித்தனர். 



இதனையடுத்து செய்தியாளர்களிடம் விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது, 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1980ம் ஆண்டு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டை கட்டி தர வேண்டும் என்ற நல்ல நோக்கில் விவசாயிகளிடம் இருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்படும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

இதற்காக கோவையில் வீரகேரளம், வடவள்ளி, வெள்ளக்கிணறு, கணபதி தெலுங்குபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் சௌரிபாளையம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்த முன்மொழிவு செய்யப்பட்டது. 

வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த பின்னரும் சிலருக்கு இழப்பீடு வழங்கப்பட்டும், வழங்கப்படாமலும் உள்ளது. இதனால் பல கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நில ஆர்ஜித நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...