ஏராளமான கடன் வாங்கிய மகன் - மனமுடைந்த தாய் தந்தை விஷம் குடித்து தற்கொலை!

திருப்பூர் அடுத்த நீதியம்மாள் நகரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் சார்லஸ், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், 15 லட்சம் கடன் வாங்கியதை தொடர்ந்து, கடன் கொடுத்தவர்கள் அவரது தந்தை அலெக்சாண்டரிடம் பணத்தை கேட்டு தொல்லை செய்த நிலையில், மனமுடைந்த தாய் - தந்தை இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் மகன் ஏராளமான கடன் வாங்கிய நிலையில், கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்ததால், மனமுடைந்த தாய் தந்தை இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் நீதியம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர் - அமலோற்பமேரி தம்பதி. இவர்களது மகன் சார்லஸ் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து தொழிலை நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் சார்லஸிடம் பணம் கேட்டதால், அவர் வீரபாண்டி பகுதியில் குடியேறியுள்ளார். அதனால் பணம் கொடுத்தவர்கள் சார்லசின் தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததால், மனமுடைந்த அவர் தனது மனைவியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

கணவன் மனைவி இருவரும் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர்‌ சென்று பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. 

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...