திருமுருகன்பூண்டி கோவிலின் 100 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி - ஆட்சியரிடம் பாஜக மனு!

திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு ராக்கியபாளையத்தில் சொந்தமான 100 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலத்தை வெளியூர் நபர்கள் அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சிகள் நடப்பதாக திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் ராக்கியபாளையம் கிராமத்தில் 8 ஏக்கர் உள்ளது. 

இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இடத்தை வெளியூரை சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் சென்று கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். 

மேலும் இடத்தை அபகரிக்க துடிக்கும் நபர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அதிகாரி முன்னிலையில் மிரட்டி வருகின்றனர். எனவே கோவில் சொத்தையும் பொது மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...