கோவை குறிச்சி அருகே கஞ்சா விற்ற இளம் தம்பதி கைது!

கோவை குறிச்சி பிரிவு அருகே இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளம் தம்பதி அசாருதீன் - சபீனா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 1.3 கிலோ அளவிலான கஞ்சாப் பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். 

கோவையில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறிச்சி பிரிவு அருகே இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் குறிச்சி பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தனியார் உணவகம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட இரண்டு பேரை, போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் குனியமுத்தூர் கங்கா நகர் 8 ஆவது வீதியை சேர்ந்த சிராஜுதீன் மகன் அசாருதீன் (30), மற்றும் அவரது மனைவி சபீனா (30) என்பதும் தெரியவந்தது.

மேலும் இருவரும் தனித்தனியே கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக மறைத்து வைத்திருந்து, அதனை இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சபீனாவிடமிருந்து 1.1 கிலோ மற்றும் அசாருதீனிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...