கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனருக்கு கார் வழங்கிய கமல்ஹாசன்!

கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனரான ஷர்மிளா சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.



கோவை: கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவின் துணிச்சலை கண்டு வியக்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு கோவையில் மிகவும் பிரபலமானவர் ஷர்மிளா. தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது வாகனத்தில் பயணிக்கும் பயணிகள், இவருக்கு ரசிகர்களாக மாறி செல்பி புகைப்படம் எடுத்து செல்வதுமாக இருந்து வந்தனர். 

இந்நிலையில் சமீபத்தில் இவரது பேருந்தில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பயணித்து விட்டு, பெண் ஒருவர் ஓட்டுனராக உள்ள பேருந்தில் பயணிப்பது பெருமையாக இருப்பதாக கூறி ஷர்மிளாவை பாராட்டிவிட்டு சென்றார். 

இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளரும். எம்.பியுமான கனிமொழியும் சமீபத்தில் அவரது பேருந்தில் பயணித்து விட்டு, அவரை பாராட்டி, கடிகாரம் ஒன்றையும் பரிசளித்து விட்டு சென்றார்.

இந்நிலையில், அவர் பணியாற்றி வந்த தனியார் பேருந்து நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. 



இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, அவரது கமல் பண்பாட்டு மையம் சார்பில், புதிய கார் ஒன்றையும் பரிசாக அளித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...