ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திட்டவட்டம்!

திருப்பூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஸ்மார்ட் சிட்டி உட்பட அனைத்து திட்டங்களும் மக்கள் வரிப்பணத்தில் கொண்டு வரக்கூடியவை என்றும், இதில் எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.



திருப்பூர்: மக்கள் வரிப்பணத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களில் எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவில் வழி பேருந்து நிலையம் ரூ.26 லட்சத்தில் புதுப்பிக்கப்படுவதற்கான பணி மற்றும் நடராஜ் திரையரங்கம் அருகே 14 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. 



இதில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். 



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, 







பல்வேறு வசதிகளை கொண்டதாக கோவில் வழி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படுகிறது. அதேபோல் திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நடராஜ் திரையரங்கம் அருகே 14 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படுகிறது. இவை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திமுக முத்திரை கொடுக்கப்படுவதாக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமானாலும் மக்கள் வரிப் பணத்தில் செய்யக்கூடிய பணிகள். இதில் எந்த வித அரசியல் முத்திரை குத்தப்படுவதற்கான நோக்கம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...