உடுமலையில் மூளை நோயால் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான விக்னேஷ் (32) என்பவருக்கு திடீரென மூளையில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவர் சென்னையில் தங்கியிருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கு மனைவியும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

இதனிடையே விக்னேஷுக்கு திடீரென மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அவரது உடல் உறுப்புகள் மருத்துவர்கள் மூலமாக தானமாக பெறப்பட்டது. 

உயிரிழந்த விக்னேஷ் கால்பந்தாட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறந்த பின்பும் உடல் உறுப்புகள் மூலமாக பலருக்கு வாழ்க்கை அளித்த சம்பவம் உடுமலை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...