தடாகம் அருகே ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த போலீசார்!

கோவை தடாகம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த நாகேஷ் என்ற 60 வயது முதியவர் நேற்றைய தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், தடாகம் போலீசாரே உடலை அடக்கம் செய்துள்ளனர்.



கோவை: தடாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இறந்த ஆதரவற்ற நாகேஷ் என்ற முதியவரின் உடலை தடாகம் காவல்துறையினரே அடக்கம் செய்தனர்.

தர்மபுரி காரியாமங்களத்தைச் சேர்ந்தவர் 60 வயதான நாகேஷ். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக கோவை தடாகம் பகுதியில் வந்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நாகேஷ் வயது மூப்பின் காரணமாக இறந்துள்ளார். 

அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது சித்தாப்பா மகன் காளியப்பன் என்பவர் உடலை பெற்றுக் கொள்வதாகவும் ஆனால் அடக்கம் செய்ய பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.



இதையடுத்து தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளார் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் கார்த்தி, முனியப்பன், பழனிசாமி ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பிரேத பரிசோதனை முடித்து ஜீவசாந்தி அறக்கட்டளை உதவியுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...