தடாகம் அருகே ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த போலீசார்!

கோவை தடாகம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த நாகேஷ் என்ற 60 வயது முதியவர் நேற்றைய தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், தடாகம் போலீசாரே உடலை அடக்கம் செய்துள்ளனர்.



கோவை: தடாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இறந்த ஆதரவற்ற நாகேஷ் என்ற முதியவரின் உடலை தடாகம் காவல்துறையினரே அடக்கம் செய்தனர்.

தர்மபுரி காரியாமங்களத்தைச் சேர்ந்தவர் 60 வயதான நாகேஷ். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக கோவை தடாகம் பகுதியில் வந்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நாகேஷ் வயது மூப்பின் காரணமாக இறந்துள்ளார். 

அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது சித்தாப்பா மகன் காளியப்பன் என்பவர் உடலை பெற்றுக் கொள்வதாகவும் ஆனால் அடக்கம் செய்ய பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.



இதையடுத்து தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளார் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் கார்த்தி, முனியப்பன், பழனிசாமி ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பிரேத பரிசோதனை முடித்து ஜீவசாந்தி அறக்கட்டளை உதவியுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...