ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது


சர்வதேச அளவில் பெண்களை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது . இந்த மகளிர் தினத்தில் பொருளாதாரம் , அரசியல் , மற்றும் சமூகரீதியில் சாதனை புரிய முயலும் பெண்கள் மீது மரியாதை, மதிப்பு, அன்பு, ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் 1921ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை, ஆர்.எஸ் புரம், மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வரும் மாநகராட்சி பெண்கள் முதியோர் காப்பகத்தில் நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்வில் மாற்றுத்திறனுடன் உழைத்து போராடும் பெண்களை போற்றும் வகையில் மகளிர் தினம் விழா ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளி பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தையல் மிஷின், கிரைண்டர், ஆடு மற்றும் பெட்டிகடைகள் வழங்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



அதில் மாற்றுத்திறனாளிகளாக இருந்து தங்கள் குடும்பத்தை காப்பாற்ற அயராது உழைத்து  குடும்பத்தை தாங்கி வரும்   ஐந்து பெண்களை தேர்ந்தெடுத்து  அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும்  அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான பொருள் உதவி வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளது ஈரநெஞ்சம் அறக்கட்டளை.

கோவை சென்னனுர் சேர்ந்தவர் சரோஜினி வயது 35. திருமணம் ஆகாதவர்  போலியோவால் பாதிக்கப்பட்டவர் ஒரு கை, கால் குறை பாடுடையவர். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார் . தனது சகோதரி வீட்டில் இருந்தபடி  ஊர் பொது மக்களுக்கு தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க  தொழில் செய்ய பெட்டிக்கடை வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.



கோவை உளியம்பாளையம் பகுதியை சேர்ந்த லதா வயது: 40  திருமணம் ஆகாதவர் . போலியோவால் பாதிக்கப்பட்டவர் ,  தனது தந்தை மறைவுக்கு    தையல் வேலைக்கு சென்று  தனது தாயாரை காப்பாற்றி வருகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு தையல் எந்திரம் வழங்கியுள்ளது.



கோவை  ஆலந்துறை பகுதியை சேர்ந்த சரஸ்வதி வயது 30 திருமணம் ஆகாதவர் . முதுகு தண்டுவடம் முதல் கால்கள் இரண்டும் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர் . தினக்கூலிக்கு காட்டு வேலைக்கு சென்று வயதான தாய் தந்தையரை காப்பாற்றி வருகிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு ஆட்டு குட்டிகள் வழங்கியுள்ளது.



கோவை செட்டிப்பாளையம் சேர்ந்த உஷா வயது 42  போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர் மாற்றும்    கணவரால் கைவிடப்பட்டவர்  கூலிவேலை செய்து தனது மகன் மற்றும் வயதான தந்தையை காப்பாற்றி வருகிறார். அவரது வேண்டுகோளின் படி தையல் எந்திரம் வழங்கியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் மாலா வயது 33 போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயல் இழந்தவர். அப்பளம் தயாரித்து தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார் . அவரது வேண்டுகோளின் படி மாவு அரைக்கும் எந்திரம்  வழங்கியுள்ளது.



சாதனை படைப்பவர்கள் மட்டும் அங்கீகாரத்திற்கும் பாராட்டிற்கும் தகுதியானவர்கள்  என்றால் .  தனது ஊனத்தை பொருட்படுத்தாமல் உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்றும் இப்படி பட்ட தேவதைகளை என்ன வென்று சொல்வது. இவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.





'இந்த விழாவில் மைக்கேல் ஜாப் ஆதரவற்ற பள்ளி மாணவிகள். ஆராதனா நடனப்பள்ளி மாணவிகள், தொல்கலை , மற்றும் அனுஷா நாட்டியம்  தடம் அமைப்பு, கலந்துக் கொண்டது. மேலும்  இவர்களுக்காக உதவிய  அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறோம்', என ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மஹேந்திரன் தெரிவித்தார்.





Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...