கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது - 500 கிலோ அரிசி பறிமுதல்!

பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று காலை கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற மதுக்கரையை சேர்ந்த சிவமுருகேசன் என்பவரை கைது செய்தனர்.



கோவை: கோவையில் இருந்து மினி ஆட்டோ மூலம் ரேசன் அரிசி கடத்த முயன்ற நபரை சுந்தராபுரம் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லை சோதனை சாவடிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று காலை கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் ரோந்து மேற்கொண்டனர். 

அப்போது அங்கு வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி தலா 50 கிலோ வீதம், 10 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுக்கரை அட்லாண்டிக் நகரை சேர்ந்த ராம்பால் மகன் சிவமுருகேசன் (50) என்பதும், இவர் காந்திபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...