தனியார் பள்ளியை மிஞ்சும் அதிநவீன வசதிகளுடன் இடிகரை அரசு பள்ளி!

கோவை மாவட்டம் இடிகரையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கோவை: இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருவது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி துவக்க நாள் விழா நிகழ்ச்சியானது வெகு சிறப்பாக நடைபெற்றது. தேர்வு விடுமுறை நிறைவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு உள்ள பள்ளிகள் அனைத்தும் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

அதன்படி இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி துவக்க நாள் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் தாய் வாழ்த்தைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் சுமதி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக பள்ளிக்கு புதிதாக வந்த மாணவர்களுக்கும், ஏற்கனவே பயின்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கைதட்டி ஆசிரியர்கள் உற்சாகமாக மாணவர்களை வரவேற்றனர்.



தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சுமதி மாணவர்களிடம் பாடல்கள் பாடி அறிவுரை கூறி அசத்தியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆங்கில வழியில் 10ஆம் வகுப்பு பயின்று முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தின் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது,



தமிழ் வழியில் 10ஆம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஆண்டாள் அம்பாள் குடும்பத்தார் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2022-2023 கல்வியாண்டில் முதலிடம் பிடித்த மாணவியின் உயர்கல்வி பயில ஏதுவாக ரூபாய் 50,000 காசோலை வழங்கப்பட்டது,



அதேபோல் முதல் 5 இடம் பிடித்த மாணவர்களுக்கு தல 2000 ரூபாய் வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரின் பாதுகாப்பில் பயின்ற ராகவன் என்ற மாணவருக்கு 3 ஆண்டு பாலிடெக் கல்லூரி கட்டணம் முதல் தவணையாக 10 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது.



மேலும் 100 சதவீத தேர்ச்சியை வழங்கிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். பிறகு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். இதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் செய்யப்பட்டு வசதிகளை பார்வையிட்டனர்.

தலைமை ஆசிரியர் சித்ரா வகுப்பறைகளில் உள்ள வசதிகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில் குறிப்பாக ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தின் மூலமாக கணினி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளி வளாகத்துக்குள் பயின்று வரும் குழந்தைகளுக்கு பகுதி நேரத்தில் தையல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஸ்டேஷனரி பொருட்கள் அனைத்தும் குறைவான விலையில் மாணவர்களே எடுத்துக் கொண்டு பணத்தை உண்டியலில் போடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவிற்கு சி. ஆர். ஐ. ஹெச். ஆர். மேனேஜர் அண்ணாதுரை, ஹெச். ஆர். ராஜா, என்.எம்.சி.டி. நிறுவனர் சங்கரநாராயணன், பாலகோபாலன் டிரஸ்ட் திருவேங்கடசாமி, சைக்கிள் நிறுத்தம் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன், ஆண்டாள் அம்பாள் குடும்பத்தார், சசிகுமார், அமெரிக்க வாழ் முன்னாள் மாணவரின் மகன் அருண் தேவராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் பகத்சிங் மனைவி தேவ பூ, தெய்வநாயகி ஏஜென்சி குருசாமி நினைவாக லோகநாதன், இவர்களுடன் உதவி தலைமை ஆசிரியர் தினேஷ் குமார், நிகழ்ச்சியினை அனைத்தையும் தொகுத்து வழங்கிய சாந்தம்மா, மேலும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...