நீலகிரி தலைகுந்தாவில் ஆட்சியர் தலைமையில் தூய்மை பாரத இயக்க முகாம்!

நீலகிரி மாவட்டம் தலைகுந்தா பகுதியில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் சாலையோரங்களில் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு குப்பைகளை சேகரித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் தலைக்குந்தா பகுதியில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் அம்ரித் துவங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தலைகுந்தா பகுதியில் அனைத்து தரப்பினரும் இணைந்து மாபெரும் தூய்மை பணி முகாமை நடத்தினர். 

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்து தூய்மை பணியினை மேற்கொண்டார்.

இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கையுறை, குப்பைகளை சேகரிக்கும் சாக்குப்பை ஆகியவை வழங்கபட்டது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் பேசியதாவது,

தூய்மை பாரத இயக்கத்தின் முக்கிய நோக்கமே ஒட்டுமொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மீண்டும் சுழற்சி முறையில் உற்பத்தி செய்யவும் பயன்படுத்த வேண்டும்.

எனவே தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் உங்கள் பகுதியில் குப்பைகளை சேகரித்து வைத்தால் அதனை வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வார்கள். எனவே நீங்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை உருவாக்க வேண்டும்.

ஊர் சுத்தமானால் தான் நாடு சுத்தமாகும். எனவே அனைவரும் குப்பையில்லா நகரை உருவாக்க பாடுபட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இதில் கோட்டாசியர் துரைசாமி, பேருராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ,ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், நந்தகுமார், ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ஸ்ரீதரன் உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோ ஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். 

அனைவரும் இணைந்து சாலை ஓரம் மற்றும் வனப்பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை சேகரித்தனர். இந்த தூய்மை பணியில் பல்வேறு அமைப்பினர் சமூக ஆர்வ லர்கள் பொது மக்கள் தூய்மை பணியாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...