மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வரும் பல்லடம் நகராட்சி வளாகம்!

பல்லடம் நகராட்சி வளாகத்தின் கழிப்பறை அருகே மதுபாட்டில்கள் வீசப்பட்டு கிடந்த நிலையில், அங்கிருந்த பேனரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தின் மீது மதுபாட்டில்கள் இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் மதுபாட்டில்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியின் அலுவலக கட்டிடம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ளது. நகராட்சிக்கு நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறை அருகே மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வளாகத்தில் உள்ளே மது அருந்துகிறார்களா? அல்லது வெளி ஆட்கள் மது அருந்துகிறார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. 



அங்கு வைக்கப்பட்டுள்ள பழைய பேனரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரது புகைப்படத்தின் மீது காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து நகராட்சி ஆணையர் விநாயகம் கூறியதாவது, 

நகராட்சி வளாகத்தில் போடப்பட்டுள்ள மது பாட்டில்களை சுத்தம் செய்து விட்டோம். வளாகத்தில் மது அருந்துவோர் யார் என்பது குறித்து கடந்த 15 நாட்களில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...