கோவை மத்திய சிறைக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் நவீன எண்ணெய் உற்பத்தி இயந்திரம் கொள்முதல்!

கோவை மத்திய சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், கோவை மத்திய சிறைக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மத்திய சிறைக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன எண்ணெய் உற்பத்தி இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

கோவை மத்தியசிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் அவர்கள் விடுதலைக்கு பிறகு சொந்தமாக தொழில் தொடங்கும் வகையில் சிறையில் இயங்கி வரும் தொழிற்கூடத்தில் சிறைவாசிகளால் போர்வை, துண்டு, கால் மிதி, கைக்குட்டை, ரெடிமேட் ஆடைகள், பினாயில், சோப் ஆயில், குளியல் சோப்பு, மெழுகுவர்த்தி, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பேக்கரி பொருட்கள், சணல் பை, ஊறுகாய், வற்றல் பை, போன்றவைகள் தயார் செய்ய உரிய பயிற்சியளிக்கப்பட்டு நல்ல முறையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிச்சந்தையில் பொதுமக்கள் குறைந்த விலைக்கு தரமான பொருட்கள் வாங்கி பயன்பெறும் வகையில் சிறை சந்தை திட்டத்தில் "Freedom" என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களில் சமையல் எண்ணெய் விற்பனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

காவல்துறை இயக்குநரும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநரான அம்ரேஷ் புஜாரியின் அறிவுரையின்படி சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு ரூ.17 லட்சம் செலவில் 2 நவீன எண்ணெய் உற்பத்தி செய்யும் செக்கு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.



இந்நிலையில், இந்த நவீன எண்ணெய் இயந்திரத்தின் மூலம் எண்ணெய் உற்பத்தி செய்யும் பணியானது, கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி.சண்முகசுந்தரம் மற்றும் சிறை கண்காணிப்பாளர் மா. ஊர்மிளா ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...