தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் ரூ.3.26 லட்சம் கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி!

கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி அளவிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வட தமிழ்நாடு - ரூ.2,01,003 கோடி, மேற்கு தமிழ்நாடு - ரூ.99,037 கோடி, தென் தமிழ்நாடு - ரூ.23,471 கோடி, கிழக்கு தமிழ்நாடு - ரூ.2,815 கோடி மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.



கோவை: கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி அளவிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் 2022 - மார்ச் 2023 நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் ரூ. 3,26,711 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வட தமிழ்நாடுக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.2,01,003 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு தமிழ்நாடுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.99,037 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தென் தமிழ்நாடுக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.23,471 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு தமிழ்நாடுக்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.2,815 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...