கோவையில் நண்பர்களிடையே குடிபோதையில் தகராறு - அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்!

கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் நண்பர்கள் இருவருக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் கோபிநாத் என்பவர் வெட்டியதில் அழகர்சாமி படுகாயமடைந்தார். இது தொடர்பாக கோபிநாத்தை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாயி என்கிற அழகர் சாமி. இவர் கார் வாட்டர் வாஷ் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் கோழி என்கிற கோபிநாத் இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள ஒரு மதுபான பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபிநாத், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகர்சாமியை தலையில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தகவலறிந்த துடியலூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...