திருப்பூரில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

திருப்பூர் கோர்ட் வீதியில் வெறிநாய்க்கடியால் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொடர் சிகிச்சையில் உள்ள சிறுவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



திருப்பூர்: திருப்பூரில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு அங்கு தெரு நாய் கடித்ததில் மூன்று சிறுவர், சிறுமியர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதில் பெரியவர்கள் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மூன்று சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



அவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 



பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கை தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து மருத்துவர்களிடம் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் மூன்று தெருநாய்களை பிடித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...