திருப்பூரில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

திருப்பூர் கோர்ட் வீதியில் வெறிநாய்க்கடியால் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொடர் சிகிச்சையில் உள்ள சிறுவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



திருப்பூர்: திருப்பூரில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு அங்கு தெரு நாய் கடித்ததில் மூன்று சிறுவர், சிறுமியர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதில் பெரியவர்கள் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மூன்று சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



அவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 



பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கை தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து மருத்துவர்களிடம் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் மூன்று தெருநாய்களை பிடித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...