வால்பாறையில் தீவிபத்திற்குள்ளான உணவகம் - நிதியுதவி வழங்கிய எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் செயல்பட்டு வந்த உணவகம் தீவிபத்தில் சிக்கிய நிலையில், கடையை மீண்டும் அமைக்க முடியாமல் இருந்த உணவக உரிமையாளருக்கு எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி நிதியுதவியை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்த உணவகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிதி உதவியை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சத்தியபாமா என்பவர் சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவு இந்த உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனிடையே, கடையை சரி செய்ய முடியாமலும், புதிய பொருட்கள் வாங்க முடியாமலும் கடையின் உரிமையாளர் சத்தியபாமா இருந்து வந்தார்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை பகுதிக்கு வந்து தீப்பிடித்து சேதம் அடைந்த ஹோட்டல் உரிமையாளரிடம் கடையை மீண்டும் கட்டுவதற்கு கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர மன்ற செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...