மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றசாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும் கோவையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களான ஐ என் டி யு சி, ஏ ஐ டி யு சி, ஹெச் எம் எஸ், சி ஐ டி யு, எம் எல் எப், எஸ் டி டி யு, எம் எல் எப் போன்ற அமைப்புகளின் சார்பில் பாஜக எம்.பியான பிரிஜ் பூசன் சரண்சிங்- ஐ கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் என்ற பதவியை அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகளை டெல்லி காவல்துறையினர் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. 



அமைதியான முறையில் போராட்டம் நடத்திய வீரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.

கோவையில் உள்ள தொழிற்சங்கங்கள் சார்பில் மல்யுத்த வீரர்களுக்கான போராட்டத்தில் தொடர் பங்களிக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...