போத்தனூர் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 471 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

போத்தனூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சாரமேடு பகுதியை சேர்ந்த அப்துல் கரீம்(45) என்பவரை கைது செய்த போலீசார், 471 கிலோ அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: போத்தனூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கரும்புக்கடை சாரமேடு ராஜீவ் நகரை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் அப்துல் கரீம்(45). இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் அவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போத்தனுர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது காரில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து காரில் இருந்த 471 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார். அப்துல்கரீமை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...