கோவை போத்தனூர் ரயில் நிலைய மின்கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

கோவை போத்தனூர் ரயில் நிலைய நடைமேடை அருகேயுள்ள மின்கம்பத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: போத்தனூர் ரயில்வே நடைமேடை அருகே மின்கம்பத்தில் தூக்கிய தொங்கிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போத்தனூர் ரயில் நிலைய பிளாட்பார்ம் அருகே உள்ள ரயில்வே மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதாக அங்கிருந்தவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். 



இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போத்தனூர் ரயில்வே போலீசார், மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் தூக்கில் தொங்கியவர் யார்? எதற்காக வந்தார்? எப்போது சம்பவம் நடந்தது? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதல் கட்டமாக நடைமேடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...