கோவையில் 10 நாளாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவோடு சுற்றிய நாய்.. தன்னார்வ அமைப்பு செய்த பேரூதவி!

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாய், விலங்குகள் நல தன்னார்வ அமைப்பின் உதவியோடு இன்று மீட்கப்பட்டுள்ளது. நாயின் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் டப்பாவும் அகற்றப்பட்டது.


கோவை: பீளமேடு அருகே பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றி திரிந்த நாய் 10 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் நாயின் கழுத்தில் மாட்டிக் கொண்டது.



இதனால் அந்த நாய் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வந்தது. நாயை மீட்பதற்காக இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.

ஆனால் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இன்று காலை The Planetic Foundation என்ற தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அங்கு வந்தனர்.

அப்போது குமுதம் நகர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக நாய் படுத்திருந்தது.



குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, லாவகமாக நாயை பிடித்த குழுவினர், அதன் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து நாயை காப்பாற்றினர்.



இலவசமாக இந்த சேவையை செய்து வரும் தன்னார்வ அமைப்புக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.



பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...