கேரள ரயிலில் போதைப் பொருள் கடத்தல் - கோவையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கேரளாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கேரளாவில் இருந்து கோவை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை ரயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஏறி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு பொதுஜன பெட்டியில் இருந்த கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து சோதனை செய்தபோது, அதில் மூன்று பண்டல்களில் சுமார் 3.492 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இது குறித்து அந்த பெட்டியில் வந்த பயணிகளிடம் போலீசார் கேட்டபோது, அது தொடர்பான விவரம் யாருக்கும் தெரியாத நிலையில், அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...