பள்ளி வாகனங்களின் தரம் குறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், பொள்ளாச்சியில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்தும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



தமிழகத்தில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்க இன்னும் பத்து நாட்களே உள்ளது.



இந்த நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் இயக்கப்படும் பள்ளி பேருந்து மற்றும் வேன்களை இன்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ளமொத்தம் உள்ள 374 பள்ளி வாகனங்களில் 300 வாகனங்கள் இந்த ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டது.



இந்த ஆய்வில் வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயக்கப்படுகிறதா, வேக கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக வைக்கப்பட்டு உள்ளதா, அவசர காலவழிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 30க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் முறையாக பாதுகாப்பு வசதி இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது.



மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கும் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...