கோவையில் இரவு நேரங்களில் உலா வரும் பைக் திருடர்கள் - அச்சத்தில் பொதுமக்கள்!

விளாங்குறிச்சி ரோடு சேரன் மாநகரில் உள்ள வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: வெள்ளலூர் அருகே வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவரது மகன் ஜெபா டானியல் (28). இவர் கோவை விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வளர்ப்பு மீன் கடை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஜெபாடேனியல் வழக்கம் போல தனியார் வணிக வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, முதல் தளத்தில் உள்ள தன்னுடைய கடைக்குச் சென்றுள்ளார். இரவு முழுவதும் அங்கிருந்த ஜெபடானியல் மறுநாள் மதியம் கீழே வந்து பார்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் கட்டமாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.



அப்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் வந்த மூன்று இளைஞர்கள், ஜெபா டானியலின் இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. 

இந்நிலையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...