திருப்பூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை - 2 ஆயிரம் வாழை மரங்களும் நாசம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருப்பூர் அடுத்த மணியக்காரம்பாளையத்தில் வீசிய சூறைக்காற்று காரணமாக கணேசன் என்பவரின் தோட்டத்தில் 4 ஏக்கரில் பயிரிட்டிருந்த 2 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும் நிலவியது. மழையின் போது பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது.

இந்நிலையில் மாவட்டத்தில் காலை 7 மணி நிலவரப்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 2 மி.மீ. குமார் நகர்ப் பகுதியில் 1 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 13 மி.மீ, பல்லடம் ரோடு பகுதியில் 2 மி.மீ, ஊத்துக்குளியில் 12 மி.மீ, மடத்துக்குளத்தில் 5 மி.மீ, குண்டடத்தில் 6 மி.மீ, உப்பாறு அணைப்பகுதியில் 17 மி.மீ, உடுமலையில் 14.10 மீ.மீ, அமராவதி அணைப்பகுதியில் 16 மி.மீ, பல்லடத்தில் 3 மி.மீ என மொத்தம் 91.10 மி.மீட்டர் மழைப் பதிவானது.

இதன் சராசரி 4.55 மி.மீட்டர் ஆகும். இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த கணேசன் (59) என்பவர் நல்லூர் மணியக்காரம்பாளையத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டிருந்தார். அனைத்து வாழைகளும் நன்கு விளைந்து குழை தள்ளிய நிலையிலிருந்தன.



சூறாவளிக் காற்றின் காரணமாக 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களும் முறிந்து நாசமாகின.



இதன் மதிப்பு ரூ.14 லட்சம் எனத் தெரிவித்த கணேசன், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...