கோவை அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர் - உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

கோவை சூலூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பாலமுருகன் எனும் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


கோவை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது28), இவர் கடந்த 14ஆம் தேதி சூலூர் காங்கேயம்பாளையம் செக் போஸ்ட், அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சையில் இருந்த பாலமுருகனுக்கு மூளை சாவு ஏற்பட்டது.

அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, மூளை சாவு அடைந்த பாலமுருகனின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக வழங்க மருத்துவமனை நிர்வாகம், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அதன்படி இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க விமான மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல்உறுப்பு தானத்தால், 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...