கோவையில் முறைகேடாக சிம் கார்டு விற்பனை - 3 பேரை கைது செய்த சைபர் கிரைம்!

கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் போலி முகவரியை பயன்படுத்தி 538 சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமார், ராம்குமார், ராமசுப்பிரமணியம் ஆகியோரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). தனியார் நிறுவன ஊழியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் சிம் கார்டுகளை சாலை ஓரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில், செந்தில்குமார் போலி முகவரி மற்றும் வேறொருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 254 சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதை கண்டுபிடித்த தொலைதொடர்பு நிறுவனம் சென்னையில் உள்ள கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் வழக்கானது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் போலி முகவரி மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமாரை கைது செய்தனர்.

இதேபோல, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொள்ளாச்சியில் போலி ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து 284 சிம் கார்டுகளை விற்பனை செய்த பொள்ளாச்சி தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார்(வயது37), குமரன் நகரை ராமசுப்பிரமணியம் (வயது41) ஆகியோரையும் கைது செய்தனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...