பல்லடம் அருகே வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதம் - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட 2 கூலி தொழிலாளிகளின் குடும்பங்கள், தங்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை அடுத்த எம்ஜிஆர் நகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளியான கருப்பசாமி தனது மனைவி தேவி மற்றும் தனது மகனுடன் நான்கு வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நகரில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சூறைக்காற்றில் சிக்கி கருப்பசாமி வீட்டின் மேற்கூரை முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. இதில் வீட்டின் உள்ளே இருந்த கருப்புசாமியின் மனைவி தேவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் மேற்கூரை சூறைக்காற்றில் சிக்கி தூக்கி எரியப்பட்டதில், மின்விசிறி, தொலைக்காட்சி, மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தது.



வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் தங்குவதற்கு இடமின்றி கருப்பசாமியின் குடும்பத்தார் தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேபோன்று கருப்பசாமியின் வீட்டிற்கு அருகேயுள்ள 2 ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.



சூறைக்காற்றில் சேதம் அடைந்த குடும்பத்தாருக்கு அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...