உக்கடம் கழிவு நீர் தொட்டியில் சட்டவிரோதமாக தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு - ரூ.50,000 அபராதம் விதிப்பு!

உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் சட்ட விரோதமாக தொழிற்சாலையின் நச்சுக் கழிவு நீரை கொண்டு வந்து இறக்கிய கழிவுநீர் வாகன உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை உக்கடம் கழிவுநீர் தொட்டியில் அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுநீரை கலந்த நபருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-ல்‌ உக்கடம்‌ சாக்கடை இணைப்பு இல்லாத (UGD) பகுதிகளில்‌ உள்ள வீடுகளில்‌ சேகரிக்கப்படும்‌ கழிவுநீரை வாகனத்தின்‌ மூலம்‌ சேகரித்து மாநகராட்சி கழிவு நீர் ஊற்றும்‌ இடத்தில்‌ இறக்கப்பட்டு, பின்‌ உக்கடம்‌ STP சென்று சுத்திகரிக்கப்பட்டு நல்ல நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில்‌ வெளியேறும்‌ நச்சு கழிவு நீரை இன்று (17.05.2023) மதியம்‌ 12.00 மணிக்கு TN 48 AZ 4780 என்ற வாகனத்தில்‌ எடுத்து வந்து உக்கடம்‌ கழிவுநீர்‌ தொட்டியில்‌ இறக்கும்‌ பொழுது துர்நாற்றம்‌ மற்றும்‌ பச்சை நிறமாக நுரையுடன்‌ வெளியேறியது.

இதுகுறித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்‌ விசாரணை செய்ததில்‌ முன்னுக்கு பின்‌ முரணாக பேசி பணி செய்ய விடாமல்‌ தடுத்த வாகன உரிமையாளா்‌ பழனிசாமி என்பவருக்கு ரூ.50,000 அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, காவல்துறையின்‌ மூலம்‌ வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும்‌ காலங்களில்‌ தொழிற்சாலை மற்றும்‌ பிற வணிக நிறுவனங்களிடமிருந்து வெளியேறும்‌ நச்சுக் கழிவுநீரை உக்கடம்‌ பகுதிக்கு கொண்டு வந்து இறக்கினால்‌ அவர்கள்‌ மீது, அபராதம்‌ விதிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...