கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து வரும் மார்ச் 14ம் தேதியன்று கலைமகள் கலைக் கல்லூரி வளாகத்தில் தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்று வேலை வழிகாட்டும் கையேட்டினை வெளியிட உள்ளார்.

இத்தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விகள் தொடர்பான விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் வல்லுநர்களால் இவ்விவரங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

வேலைவழிகாட்டி கையேட்டில் உயர்கல்வி பற்றிய விவரங்கள், கல்விக்கான உதவி தொகை பெறுதல், உயர்கல்வி வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, எந்த வேலைவாய்ப்பு பெற என்ன கல்வித் தகுதி தேவை என்பது பற்றிய விவரங்கள் முப்படைகளில் சேர என்ன கல்வித் தகுதி, அதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் பற்றிய விவரங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய இணையதள முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுவாக வாழ்வில் முன்னேற உரிய தகவல்கள் அளிக்கப்படுகிறது.

எனவே, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...