கிணத்துக்கடவு அருகே தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் உடல் மீட்பு!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் பத்திரமாக மீட்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தனியார் கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் கார்த்திகேயன் (22). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் படித்து வந்தார். அதே கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கல்லூரி விடுதியில் இருந்து முடி வெட்டுவதற்காக கிணத்துக்கடவிற்கு சென்றபோது அவரது கல்லூரி நண்பர்கள் ஜீவானந்தம், மாதவன், ஹரி,இளங்கோ உள்ளிட்ட 8 பேருடன் கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றதாக தெரிகிறது.

தடுப்பணையில் அனைவரும் குளித்துவிட்டு திரும்பும்போது கார்த்திகேயன் மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் வந்து தடுப்பனையில் கார்த்திகேயன் உடலை தேடினர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு தடுப்பணை தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இறந்து போன கல்லூரி மாணவன் உடலில் காயம் இருந்ததால் மாணவன் கார்த்திகேயனின் தந்தை திருப்பதி தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனுடன் குளிக்க சென்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...