கிணத்துக்கடவு அருகே தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் உடல் மீட்பு!

கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்த தஞ்சை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் பத்திரமாக மீட்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே தனியார் கல்லூரி மாணவர் நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் கார்த்திகேயன் (22). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் படித்து வந்தார். அதே கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது கல்லூரி விடுதியில் இருந்து முடி வெட்டுவதற்காக கிணத்துக்கடவிற்கு சென்றபோது அவரது கல்லூரி நண்பர்கள் ஜீவானந்தம், மாதவன், ஹரி,இளங்கோ உள்ளிட்ட 8 பேருடன் கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றதாக தெரிகிறது.

தடுப்பணையில் அனைவரும் குளித்துவிட்டு திரும்பும்போது கார்த்திகேயன் மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் வந்து தடுப்பனையில் கார்த்திகேயன் உடலை தேடினர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு தடுப்பணை தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இறந்து போன கல்லூரி மாணவன் உடலில் காயம் இருந்ததால் மாணவன் கார்த்திகேயனின் தந்தை திருப்பதி தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனுடன் குளிக்க சென்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...