சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - திருப்பூர் மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை

திருப்பூர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவி ஸ்ரீசா சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


திருப்பூர்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வீதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீசா500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை பாராட்டும் வகையில், பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இதேபோல் மாவட்ட அளவில் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஸ்ரீசா, பள்ளி நிர்வாகம் அளித்த முழு ஒத்துழைப்பின் காரணமாக தான் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடிக்க முடிந்ததாகவும், பள்ளி ஆசிரியர்கள் தனக்கு உதவிகரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...