நான்கு சக்கர வாகனம் வாங்கியதில் மோசடி - போத்தனூர் போலீசில் பாதிக்கப்பட்டவர் புகார்!

கோவை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் நான்கு சக்கர வாகனத்தை வாங்கிவிட்டு, அதற்கான ரூ.6 லட்சம் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த தேனியைச் சேர்ந்த சுரேஷ் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை மதுக்கரை ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து.

இவரது மகன் ரமேஷ்குமார் (42). இவர் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தனது நான்கு சக்கர வாகனத்தை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த ராஜா மகன் சுரேஷ் (வயது45) என்பவருக்கு விற்பனை செய்ய ரமேஷ்குமார் பேசியுள்ளார்.

இதையடுத்து ,கோவை வந்த சுரேஷ், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ரமேஷ் குமாரின் வீட்டிற்கு வந்து ரூ.10 ஆயிரம் மட்டும் முன்பணமாக கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.6 லட்சம் பணத்தை ஏழு நாட்களுக்குள் கொடுப்பதாக கூறிவிட்டு நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவர் பணத்தை தராமல் இருந்ததோடு, சுரேஷ் செல்போனில் அழைத்தபோதும் அதை எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ், போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...