கோவையில் வாகன ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் மோசடி - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை!

கோவை போத்தனூரில் வாகன என்ஜின் ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் கடை உரிமையாளர் மீது போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வாகன ஆயில் விற்பனை கடையை அணித் நிர்மல் ராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பிலான ஷெல் ஆயில்களை வாங்கியுள்ளார்.

இதற்கு உண்டான பணத்தை கொடுக்காமல் அணித் நிர்மல்ராஜ் தாமதம் செய்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தினர் கேட்டதால் நான்கு காசோலைகளை நிர்மல் ராஜ் வழங்கி உள்ளார்.

அதில் முதல் காசோலைக்கு ரூ.2 லட்சம் எடுக்கப்பட்ட நிலையில், மற்ற காசோலைகளுக்கு நிர்மல் ராஜ் வங்கியில் பணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

அப்போது, அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் மோசடி செய்த அணித் நிர்மல் ராஜ் மீது தனியார் நிறுவனத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...