கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற 2 இளைஞர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளமடையில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் நேற்று முந்தினம் இரவு வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

காலை வந்து பார்த்த போது, அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெருமாள் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளர்.

இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது அது திருடப்பட்ட வாகனம் என தெரியவந்தது.

இதையடுத்து அதில் வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பைக்கையும் மீட்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...