கோவை மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் - ஆட்சியர் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளப்பாளையம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர், இருகூர் மற்றும் கண்ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி, இருகூர் பேரூராட்சி பகுதியில் நொய்யல் ஆற்றில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சூலூர் பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.



மேலும் ரூ.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு மூலம் முதல்வரின் காலை உணவு திட்டத்தினை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தும் விதமாக உணவு சமைப்பு பயிற்றுநர்கள் மூலம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் செயல்முறை பயிற்சியை ஆய்வு செய்தார்.



அதேபோல் சூலூர் சந்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், கண்ணம்பாளையம் பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் யோகா மையத்துடன் கூடிய சுகாதார நிலையம் கட்டும் பணிகள், பள்ளபாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா உள்ளிட்ட பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...