கோவை - துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்குவதில் சிக்கல்!

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் மற்ற விமான நிலையங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 1,30,000 என்ற இருக்கைகளின் எண்ணிக்கையை மத்திய அரசு உயர்த்தாததே கோவை - துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படாததற்கு காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்கப்படாததற்கு இருக்கைகள் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரிக்காததே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய 2 வெளிநாடுகளுக்கு மட்டுமே தற்போது நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை.

இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, இந்தியாவில் இருந்து துபாய்க்கு வாரந்தோறும் 65,000 பயணிகள் வீதம் 1,30,000 இருக்கைகள் (வருகை, புறப்பாடு சேர்த்து) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப அதிக வரவேற்பு கிடைத்துள்ள விமான நிலையங்களில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை - துபாய் இடையேயான நேரடி விமான சேவை தொடங்க கடந்த 2006 - 2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பைலேட்ரல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கோவையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கலாம்.

கோவை - துபாய் இடையே விமான சேவை தொடங்க தொழில் அமைப்பு நிர்வாகிகள் முதலில் விமான சேவை தொடங்கினால் லாபகரமாக இயக்கலாம் என்பதை அந்நாட்டு விமான நிறுவனத்துக்கு புரிய வைக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள, துபாய் நாட்டுக்கான இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்து கோவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இல்லையெனில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வாரந்தோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே கோவை - துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...