கோவையில் சாலையில் சென்ற நபரிடம் செல்போன் பறிப்பு - மின்வாரிய ஊழியர் கைது!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துச் சென்ற மர்மநபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், அதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், குனியமுத்தூர் மின்வாரிய ஊழியர் வன்னியராஜா என்பது தெரியவந்தது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துச் சென்ற மின்வாரிய ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் செல்போனை பறித்து சென்றனர். அப்போது அவர்கள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். அவருடன் வந்தவர் தப்பிச் சென்ற நிலையில், பிடிபட்ட நபரை பொதுமக்கள் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வன்னியராஜா என்பதும், இவர் குனியமுத்தூர் மின்வாரியத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், இவர் தனது நண்பருடன் நள்ளிரவில் சாய்பாபா காலனி பகுதியில் ஏற்கனவே ஒருவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வன்னியராஜாவை கைது செய்த போலீசார் தப்பி சென்ற அசோக் என்பவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...