தமிழகத்தில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்த ஆளுநர் முயற்சிக்கிறார்..! - அமைச்சர் ஏ.வ.வேலு குற்றச்சாட்டு

பெரியார் முதல் தற்போது உள்ள திமுக அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால், ஆளுநர் கொண்டுவர முயல்வது மனுதர்மம். தமிழகத்தின் கருத்து, பண்பாடுக்கு எதிராக ஆளுநர் நடந்து வருகிறார் என்று திருப்பூரில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.



கோவை: திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூர் வடக்கு மாநகர திமுக சார்பில் அண்ணா காலனி பகுதியில் நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழக அரசு இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக திமுக ஆட்சியில் செய்திருப்பதாக அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, தமிழகத்தில் ஆளுநர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரட்டை ஆட்சி முறையை தற்போது கொண்டு வர முயற்சிப்பதாகவும், திமுக மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும்வரை அதை அனுமதிக்க மாட்டோம் எனவும் தாய் மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் ஆளுநர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரை அழைத்து அவரது கருத்துக்களை திணித்து வருவதாகவும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் கருத்து, பண்பாட்டிற்கு எதிரான கருத்தை திணித்து வருவதாகவும், இதன் காரணமாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு முரண்பாடு இருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரணமும் இல்லை என்று கூறினார்.

பெரியார் முதல் தற்போது உள்ள திமுக அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால், ஆளுநர் கொண்டுவர முயல்வது மனுதர்மம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திமுக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...