கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா - காவல் ஆய்வாளர் ஒருமையில் பேசி மிரட்டியதாக புகார்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடப்பிரச்சினை காரணமாக தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பெண் தனலட்சுமி என்பவரை, கோவை பந்தயசாலை காவல் ஆய்வாளர் சாந்தகுமார், ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை காவல் ஆய்வாளர் ஒருமையில் பேசி மிரட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, தேவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, பக்கத்து இடத்துக்காரர் குட்டையில் இருந்து ஆற்றுக்கு நீர் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால், தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், ஊர் தலைவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இன்று தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி பெண்ணிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவை முடித்து மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையுடன் சேர்ந்து மனு அளிக்க சென்றார்.

அப்போது நுழைவாயிலில் இருந்து வேகமாக வந்த கோவை பந்தய சாலை காவல் ஆய்வாளர் சாந்தகுமார், அந்தப் பெண்ணிடம் மனுவை வாங்கி பார்த்தார். மனு நியாயமான மனு எனத் தெரிவித்த அவர், "தேவையில்லாம உட்கார்ந்தா ரிமண்ட் பண்ணிப்போடுவேன் ஜாக்கிரதை. உன்ன மாறி ஆயிரம் பொம்பளைகளை பார்த்திருக்கேன் போ" என ஒருமையில் மிரட்டினார்.

இதற்குபின் வந்த மற்றொரு பெண் ஆய்வாளர் மாற்றுத்திறனாளி பெண்ணின் கையை பிடித்து இழுத்ததால அவர் நிலைதடுமாறினார். இந்த நிலையில் மனு கொடுக்க வந்த தம்மை, காவல்துறையினர் மிரட்டுவதாக மாற்றுத்திறனாளி தனலட்சுமி குற்றம் சாட்டினார்.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...