கோவையில் வாய்த்தகராறில் சிறுவன் மீது தாக்குதல் - மற்றொரு சிறுவன் கைது

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக பள்ளி சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தன்னுடன் படித்த சிறுமியை காதலித்து வந்தார்.

இதனால், சிறுவனுக்கும், சிறுமியின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சிறுமியின் அண்ணன் அச்சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்ததுள்ளது.

அங்கு சிறுவன் மற்றும் அவரது நண்பர் ஜெகதீஷ் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிறுமியின் அண்ணன் மீண்டும் அச்சிறுவனை அழைத்து தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அதை தடுக்க சென்ற நண்பர் ஜெகதீஷை, சிறுமியின் அண்ணன் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...