கோவை அருகே நொய்யல் ஆற்றில் ரசாயனக் கழிவு நீர் கலப்பு - காற்றில் பறக்கும் நுரையால் மக்கள் அச்சம்!

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் இருந்து பட்டண பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றில் நுரை ததும்பும் ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலந்து செல்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



கோவை: குப்பை, பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் உள்ளிட்ட கழிவுகளுடன் நொய்யல் ஆறு பயணித்து வருகிறது.



கோவை மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.



இதனைப் பயன்படுத்தி, கோவையில் உள்ள தொழிற்சாலையில் பட்டறைகளில் இருந்து சாயம், ஆயில் உள்ளிட்ட ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு நொய்யல் ஆற்று நீரில் கலக்கப்படுகின்றன.

இதனால், கோவை ஒண்டிப்புத்தூர் நெசவாளர்காலனியில் இருந்து பட்டணம் பகுதி செல்லும் வழியில் உள்ள அணைக்கட்டில், நொய்யல் ஆறானது சாக்கடை கழிவு நீர் கலந்த நிலையில், கருமை நிறமாக காட்சியளிக்கிறது.



ஆற்றில் கலக்கப்படும் இதுபோன்ற கழிவுகளால், காற்றில் அவற்றின் நுரைகள் பறந்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...