கோவையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி - போலீசார் விசாரணை

கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாந்தாமணி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது தாயார் சாந்தாமணியுடன் குடியிருந்து வருகிறார். சாந்தாமணிக்கு புற்றுநோய் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



ஆனால், அங்கு சிகிச்சை பலனில்லாமல் சாந்தாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், சாந்தாமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...