சித்ரா பவுர்ணமி நாளில் வெள்ளியங்கிரிமலை ஏறிய மேலும் ஒருவர் பலி!

கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்த குமார் (40), சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது, மயங்கி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். அவரை சோதித்த மருத்துவ உதவியாளர், மாரடைப்பில் குமார் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏறிய மேலும் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார் (40). இவர் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளார். இன்று மதியம் ஏழாவது மலைக்குச் சென்ற குமார் அங்கு சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு மீண்டும் கீழே இறங்கி உள்ளார்.

அப்போது ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்த குமாரை அங்கிருந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் இருந்த உதவி மருத்துவர் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

குமார் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட ஆலாந்துறை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை

Coimbatore மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 42 வேட்பாளர்கள் மன...

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Coimbatore மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, Pharm-D மாணவரான முகேஷ் குமார் (23) மார்பு வலியால் சுயநினைவை இழந்த...

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர...

கிணத்துக்கடவு தொகுதி வெற்றி வேட்பாளர் S.தாமோதரனை அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்து

கோயம்புத்தூரில் BJP முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் NDA சார்பில் AIADMK கிணத்த...

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...